உள்ளூர் செய்திகள் (District)

ஊட்டியில் மே தின விழாவை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை

Published On 2023-05-04 09:03 GMT   |   Update On 2023-05-04 09:04 GMT
  • அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா நடைபெற்றது.
  • 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஊட்டி,

ஊட்டியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா நடைபெற்றது.

கூட்டத்தில் ஏழை மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆனந்தன், நீலகிரி மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கினார். இதில் மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு, மாவட்ட துணை செயலாளர் கோபால கிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான அக்கிம்பாபு, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்திகேத்தி, பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான், ஓ.சி.எஸ் தலைவர் ஜெயராமன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகர செயலாளரும் கிளை செயலாளருமான நொண்டி மேடு கார்த்திக் மற்றும் நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் அசோக்குமார், கூடலூர் ராமமூர்த்தி உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News