உள்ளூர் செய்திகள்

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2022-12-27 06:42 GMT   |   Update On 2022-12-27 06:42 GMT
  • எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களுக்கான திருப்பூர் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 5 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் (அறை எண்.120) திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் புகார்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News