உள்ளூர் செய்திகள்

காரைமேடு ஒளிலாயத்தில் மகா யாகம் நடந்தது.

காரைமேடு ஒளிலாயத்தில் மகா யாகம்

Published On 2023-06-07 09:48 GMT   |   Update On 2023-06-07 09:48 GMT
  • ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் குணமடைய வேண்டி யாகம் வளர்க்கப்பட்டது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சீர்காழி:

சீர்காழி அருகே காரை மேட்டில் ஒளிலாயம் அமைந்துள்ளது.

இங்கு 18 சித்தர்களுக்கும் தனித்தனியாக கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் வளாகத்தில் ராஜேந்திரா சுவாமிகள் ஜீவசமாதி அடைந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோ விலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு வேஷ்டி, புடவை வழங்கப்பட்டது.

மேலும், ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்கள் ஆன்மா சாந்தி அடையவும், விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் மகா யாகம் வளர்க்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் நாடிமுத்து, செந்தமிழன், பொறியாளர் மாமல்லன் செய்திருந்தனர்.

Tags:    

Similar News