உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

Published On 2022-07-06 10:23 GMT   |   Update On 2022-07-06 10:23 GMT
  • பைபாஸ் சாலை வழியாக நேற்று மாலை நடந்து சென்றபோது ஸ்கூட்டரில் வேகமாக வந்த ஒரு பெண் அவர் மீது மோதிவிட்டாராம்.
  • சிகிச்சை பலனின்றி முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி கோவிந்த தாஸ் நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(70). இவர் நேதாஜி பைபாஸ் சாலை வழியாக நேற்று மாலை நடந்து சென்றபோது அவ்வழியே ஸ்கூட்டரில் வேகமாக வந்த ஒரு பெண் அவர் மீது மோதிவிட்டாராம்.

இதில் தலையில் அடிபட்டு படுகாயமடைந்த முத்துகிருஷ்ணனை மீட்டு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தருமபுரி நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News