உள்ளூர் செய்திகள் (District)

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினர்.

நாகையில், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-12 10:02 GMT   |   Update On 2023-09-12 10:02 GMT
  • இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
  • போலீசார்- பா.ஜனதா.வினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்:

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சனாத னத்தை ஒழிப்போம் என்று சொல்லி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி யதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், மாநாட்டில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் செப்டம்பர் 11-ந்தேதி தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை அலுவ லகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் அண்ணா மலை அறிவித்திருந்தார்.

அதன்படி நாகையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நேற்று பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஒன்று கூடினர்.

தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கோஷங்களை எழுப்பினர்.

போலீசார் அனுமதி மறுத்து தடைகளை ஏற்படுத்தி தடுத்ததால் போலீசார் பாஜக வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News