உள்ளூர் செய்திகள்
ஆர்.கே.நகர் பகுதியில் நாளை மின்தடை
- துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நாளை(புதன்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
அவினாசி :
அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-அவினாசி ஆர்.கே.நகர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நாளை(புதன்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட தொட்டி மன்னரை, நல்லாத்துப் பாளையம், ரோஜா நகர், எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.