உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த கோவிலின் முன்பு பொதுமக்கள் திரண்டு இருந்த காட்சி.

சந்தூரில் கோவில்-வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

Published On 2022-12-02 09:47 GMT   |   Update On 2022-12-02 09:47 GMT
  • கோவிலின் பூட்டை மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு உடைத்துள்ளனர்.
  • உள்ளே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள சந்தூரில் வீரபத்திரன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டை மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு உடைத்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். அதில் இருந்த நகை மற்றும் காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதனை இன்றுகாலை பார்த்து அப்பகுதியில் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டனர். மர்ம நபர்கள் நோட்டமிட்டு இரவு நேரத்தில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இந்த கோவிலில் சுமார் 22 பவுன் தங்க நகைகளும், 16 பவுன் வெள்ளி பொருட்களும் திருடு போனதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் கொள்ளை நடந்த பகுதியில் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டது. போலீசார் கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இதே போல் அப்பகுதியை சேர்ந்த சின்ராஜ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 2 பவுன் தங்க நகையும், 8 ஆயிரம் பணமும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சந்தூரில் நடந்த அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News