உள்ளூர் செய்திகள்

சுவரொட்டிகள் அகற்றும் பணியை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பார்வையிட்டார்.

தஞ்சையில், சுவரொட்டிகள் அகற்றும் பணி தீவிரம்

Published On 2022-11-08 09:58 GMT   |   Update On 2022-11-08 09:58 GMT
  • சுவரொட்டிகள் அனைத்தும் மாநகராட்சி ஊழியர்கள் உதவியோடு அகற்றப்பட்டது.
  • சுவரொட்டிகளை மீண்டும் ஒட்டினால் கடும் நடவடிக்கை.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறை சார்பாக தஞ்சை ஆற்றுப்பாலத்தில் ஒட்டி உள்ள சுவரொட்டிகளை அகற்றும் பணி நடைபெற்றது.

அதேபோல் தஞ்சை மேம்பாலம், ரயிலடியில் உள்ள கீழ்பாலம், மேரிஸ் கார்னரில் உள்ள மேம்பாலம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் அனைத்தும் மாநகராட்சி ஊழியர்கள் உதவியோடு அகற்றப்பட்டது.

மேலும் இதே போல் சுவரொட்டிகளை மீண்டும் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் எச்சரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை அதிகாரி, மாநகராட்சி துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாநகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News