உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் அ.ம.மு.க., சார்பில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

Published On 2023-01-30 07:19 GMT   |   Update On 2023-01-30 07:19 GMT
  • கூட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் சிவசக்தி தலைமை வகித்தார்.
  • தமிழ் மொழிக்காக போராடி உயிர் நீத்த தியாகம் குறித்து விளக்கி பேசினார்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பல்லடம் கடை வீதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் சிவசக்தி தலைமை வகித்தார்.

புறநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் பிரேம்குமார், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் கிங், வழக்கறிஞர் பிரிவு ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் நகரச் செயலாளர் யவன கதிரவன் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளரும்,மேற்கு மண்டல பொறுப்பாளருமான உடுமலை சண்முகவேலு கலந்து கொண்டு, இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்கு உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் வாழ்க்கை வரலாறு, தமிழ் மொழிக்காக போராடி உயிர் நீத்த தியாகம் குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில்,திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான விசாலாட்சி, திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார், தலைமைக் கழக பேச்சாளர்கள் பழனி குமணன், திருப்பூர் சுரேஷ், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகள் குறித்து பேசினார்கள். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், சதீஷ்குமார், துரை பாண்டியன்,சிறுபான்மை பிரிவு ரபி அகமது மற்றும் அ.ம.மு.க.மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News