உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம். 

வெள்ளகோவிலில்ரூ.41 லட்சத்திற்கு சூரிய காந்தி விதை ஏலம்

Published On 2022-10-08 07:08 GMT   |   Update On 2022-10-08 07:08 GMT
  • நேற்று முன்தினம் மொத்தம் ரூ.41லட்சத்து 13ஆயிரத்து 340க்கு வணிகம் நடைபெற்றது.
  • 74ஆயிரத்து 829கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்று வருகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை 109 விவசாயிகள் கலந்து கொண்டு 74ஆயிரத்து 829கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.58.59க்கும், குறைந்தபட்சம் ரூ.45.69க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று முன்தினம் மொத்தம் ரூ.41லட்சத்து 13ஆயிரத்து 340க்கு வணிகம் நடைபெற்றது.விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை க்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News