உள்ளூர் செய்திகள் (District)

பெரியாறு, வைகை அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2023-11-19 05:12 GMT   |   Update On 2023-11-19 05:12 GMT
  • தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது.
  • முல்லைபெரியாறு அணையில் 105 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலைமுதல் நீர்திறப்பு 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.


கூடலூர்:

கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக வைகை அணை உள்பட தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகள் முழுகொள்ளளவை எட்டியது. மேலும் தண்ணீர் தேவைப்படாததால் முல்லைபெரியாறு அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. நேற்றுவரை முல்லைபெரியாறு அணையில் 105 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலைமுதல் நீர்திறப்பு 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணைக்கு 1209 கனஅடிநீர் வருகிறது. நீர்மட்டம் 133.70 அடியாக உள்ளது.

இதேபோல் வைகை அணையில் நேற்று 1899 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக நீர்திறப்பு 2099 கனஅடியாக உயர்த்தப்பட்டது. அணைக்கு 558 கனஅடிநீர் வருகிறது. நீர்மட்டம் 68.41 அடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிற நிலையில் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. 115 கனஅடிநீர் வருகிறது. அது அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News