உள்ளூர் செய்திகள்

விரைவு ரெயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் அதிகரிப்பு-தெற்கு ரெயில்வே

Published On 2024-09-11 07:17 GMT   |   Update On 2024-09-11 07:17 GMT
  • படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பொதுப்பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன.
  • பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே புதிய அறிவிப்பு.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரெயில்களின் சில படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பொதுப்பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன.

அதன்படி சென்னை சென்ட்ரல்-ஈரோடு ஏற்காடு விரைவு ரெயில், சென்னை சென்ட்ரல்-ஐதராபாத் விரைவு ரெயில் (எண் 12603) 12 படுக்கை வசதி பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்ட நிலையில் ஜனவரி 20-ந் தேதி முதல் 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.


புதுச்சேரி-மங்களூா் விரைவு ரெயில் (16855) ஜனவரி 16-ந் தேதி முதலும், சென்னை சென்ட்ரல்-நாகா்கோவில் விரைவு ரெயில் (எண் 12689) ஜன.17-ந் தேதி முதலும், எா்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரெயில் (16361) ஜன.18-ந் தேதி முதலும், கொச்சுவேலி-நிலாம்பூா் ராஜ்ய ராணி விரைவு ரெயில் ஜன.19-ந் தேதி முதலும் 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

இதேபோல் சென்னை சென்ட்ரல்-ஆலப்புழா விரைவு ரெயில் (22639), திருவனந்தபுரம்-மதுரை அமிா்தா விரைவு ரெயில், சென்னை சென்ட்ரல்-மைசூரு காவேரி விரைவு ரெயில், சென்னை சென்ட்ரல்-பாலக்காடு விரைவு ரெயில் (22651) ஜனவரி 20-ந் தேதி முதல் 4 முன்பதிவில்லா பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

மேலும், விழுப்புரம்-கோரக்பூா் விரைவு ரெயில் (22604) ஜனவரி 21-ந் தேதி முதலும், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் விரைவு ரெயில் (12695), திருநெல்வேலி-புருலியா விரைவு ரெயில் ஜனவரி 22 முதலும், புதுச்சேரி-கன்னியாகுமரி விரைவு ரெயில் ஜனவரி 26-ந் தேதி முதலும் 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

இவ்வாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News