உள்ளூர் செய்திகள் (District)

சாலை மறியலில் ஈடுபட்ட 11 பேர் மீது வழக்கு

Published On 2023-03-18 09:46 GMT   |   Update On 2023-03-18 09:46 GMT
  • அப்பகுதியை சேர்ந்த 15 குடும்பத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.
  • கோவிந்தசாமி நிலத்தை அளந்து வேலி போட்டு விட்டார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் மேல்கோட்டாய் தெருமேடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கு சொந்தமான நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த 15 குடும்பத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவிந்தசாமி நிலத்தை அளந்து வேலி போட்டு விட்டார். இதனால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து போலீஸ் விஜய சங்கர் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News