உள்ளூர் செய்திகள்

ஆடி கிருத்திகை விழா கொடியேற்றம் நடந்தது.

கொடி ஏற்றத்துடன் தொடங்கியது செஞ்சி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

Published On 2022-07-13 08:31 GMT   |   Update On 2022-07-13 08:31 GMT
  • செஞ்சி முருகன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் ஆடி கிருத்திகை விழா தொடங்கப்பட்டது.
  • காலையில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலை பி.ஏரிக்கரையில் உள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலய 49 -வது ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு காலையில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. செஞ்சி ஒழுங்குமுறை விற்பணை கூட நெல், அரிசி, மணிலா, வியாபாரிகள் .மற்றும் எடை பணி தொழிலாளர்கள் சார்பில் நடைபெறும் இவ்விழாவில் 22-ந் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை திருவீதியுலாவும் நடைபெறுகிறது. 23-ம்தேதி ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து 108 பால் குட ஊர்வலமும், சக்திவேல் அபிஷேகம் மற்றும் ஊர்வலமும், தொடர்நது காலை 10 மணிக்கு மேல் அகினி சட்டி ஊர்வலமும், தீமித்தல் ஆகியவைதேர் வீதியுலாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை செஞ்சிஒழுங்குமுறை விற்பனைக்கூட நெல் அரிசி, மணிலா, வியாபாரிகள் சங்கம் மற்றும் எடைபணி தொழிலாளர்கள், ஊர் பொது மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News