உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் பலாப்பழ திருவிழா: பொதுமக்களை கவர்ந்த உணவு வகைகள்

Published On 2024-06-03 04:08 GMT   |   Update On 2024-06-03 04:08 GMT
  • நாளோடை பலாதோப்பில் பலாபழ திருவிழா நேற்று நடந்தது.
  • வருமானத்தை பன்மடங்காகப் பெருக்குவது விளக்கப்பட்டது.

பண்ருட்டி:

பண்ருட்டியை அடுத்த கீழ் மாம்பட்டு கிராமத்தில் நாளோடை பலாதோப்பில் பலாபழ திருவிழா நேற்று நடந்தது.

விழாவில் வேளாண், தோட்டக்கலை திட்டங்கள், பயிர் சாகுபடி, பலா ரகங்கள் குறித்தும், பயன்கள் குறித்தும், மத்திய, மாநில அரசின் பங்களிப்புகள் குறித்து வேளாண் அதிகாரிகள் பேசினர்.

நிகழ்ச்சியில், பண்ருட்டி பலாவின் சிறப்புகளை அறிந்து கொள்ளவும். பலாவினுடைய இலை, பிஞ்சு, காய், பழம், பழத்தின் ஈக்கு, சுளை, கொட்டை, தொப்புள். மரம் இவைகளை மதிப்புக்கூட்டுதல் செய்து சந்தைப்படுத்துவது, வருமானத்தை பன்மடங்காகப் பெருக்குவது விளக்கப்பட்டது.

பலாவின் பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், கண்காட்சியில் பலாச்சுளை சாறு, பலாவத்தல், பலாச்சுளை, பலாகொட்டை அவியல், பலாச்சுளை அல்வா, பலா பிரியாணி, பலாச்சுளை பனிக்கூழ் (ஐஸ்கிரீம்)ஆகியவை இடம் பெற்றது.

நாட்டு பலா கன்றுகள், பலா சாக்லேட், பலா பிஸ்கட், பலா பஜ்ஜி இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மரபு அரிசி, அவல் வகைகள், நாட்டுச் சர்க்கரை, மரசெக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், தின்பண்டங்கள், நாட்டு காய்கறி, கீரை விதைகள், கண்காட்சியில் இடம் பெற்றது. இது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. மேலும் மரபு நெல் ரகங்களின் கண்காட்சி மற்றும் மரபு மரங்களின் விதைகள் கண்காட்சி இடம்பெற்றது.

முடிவில் அதிக சுவையுடைய பலா மற்றும் அதிக எடையுடைய பலாவின் உரிமையாளர் தேர்வு செய்யப்பட்டு பரிசு பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி பலா மேம்பாட்டுக் குழுவினர் செய்திருந்தனர். 

Tags:    

Similar News