உள்ளூர் செய்திகள் (District)
பூட்டிய வீட்டில் நகை-பணம் திருட்டு
- சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் சென்னை சென்றார்.
- திரும்பி வந்துபார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலத்தை சேர்ந்தவர் மாதவன்.
சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் சென்னை சென்றார்.
திரும்பி வந்துபார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.20 ஆயிரம் ரொக்கம், 2 தங்க மோதிரம், வெள்ளி பொருட்கள் மாயமாகியது.
மர்ம நபர்கள் வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து அவர் வலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.