உள்ளூர் செய்திகள்

குலசேகரத்தில் ராஜா ஜூவல்லர்ஸ் இல்லத் திருமணம்

Published On 2022-06-13 08:04 GMT   |   Update On 2022-06-13 08:04 GMT
  • திருமண மண்டபத்தில் வைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • ஏராள மானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

கன்னியாகுமரி :

குலசேகரத்தில் செயல்ப ட்டு வரும் பிரபல நகைகடையான ராஜா ஜூவல்லர்ஸ் மற்றும் ராஜா ஹேசல், ராஜா பெங்கட்ஹால் ஆகிய வற்றின் உரிமையாளரான தொழிலதிபர் ராஜ கோபால்-சார்லெட் பென்னி தம்பதிகளின் மகன் சி.ஆர்.கிரன். பொறியாளரான இவர் ராஜா குரூப்ஸின் நிர்வாக இயக்குனராக ராஜகுரு பிசின் இயக்குனராக செயலாற்றி வருகிறார்.

இவருக்கும் பொன்மனை மடத்துவிளை பகுதியை சேர்ந்த செல்வன்-ராஜகலா தம்பதிகளின் மகள் எஸ். ஆர். சோணிக்கும் ஈஞ்சகோடு சகாயமாதா ஆலயத்தில் வைத்து கடந்த 9-ந்தேதி திருமணம் நடைபெற்றது அன்று மாலை குலசேகரம் அருகே செருப்பாலுர் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் வைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அரசி யல் பிரமுகர்கள, மக்கள் பிரதிநிதிகள், தொழிலதி பர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் என ஏராள மானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதற்கான ஏற்பாடுகளை ராஜாகுரூப்ஸ் உரிமையாளர் ராஜகோபால், சார்லெ ட்பென்னி மற்றும் ராஜா குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் சி.ஆர். அருண் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News