உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டத்தில் 110 கிலோ குட்கா பறிமுதல்

Published On 2022-09-30 07:05 GMT   |   Update On 2022-09-30 07:05 GMT
  • தொழிலாளி கைது செய்யப்பட்டார்
  • குட்கா புகையிலை எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க போலீ சார் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கஞ்சா குட்கா வழக்கு களில் சிக்குபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகி றார்கள். குட்கா கஞ்சா விற்ப னையை தடுக்க 7 பறக்கும் படைகள் அமைக் கப்பட்டு கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மார்த் தாண்டம் இன்ஸ்பெக் டர் செந்தில்வேல்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது சாக்கு மூட்டை களில் குட்கா புகையிலை இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் சாக்கு மூட்டையில் இருந்து 110 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரித்த போது படந்தாலு மூட்டை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நபரி டம் குட்கா புகையிலை எங்கிருந்து வாங்கி வரப் பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News