உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே விபத்துகளில் சிக்கி 2 பேர் காயம்

Published On 2023-07-06 06:53 GMT   |   Update On 2023-07-06 06:53 GMT
  • கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • தலை மற்றும் கழுத்து, முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது

கன்னியாகுமரி :

திருவட்டார் அருகே வீயன்னூர் கோழியோட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஐசக் சிங் (வயது 42), பொக்லைன் டிரைவர். நேற்று மாலை இவர் பூவன்கோட்டில் இருந்து கோழியோட்டுவிளை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வீயன்னூர் பகுதியை சேர்ந்த மோகன் (54) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் ஐசக் சிங்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஐசக் சிங்கின் மனைவி சுஜி (32) திருவட்டார் போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வேர்க்கிளம்பியை அடுத்த உள்ளுவெட்டி காப்புவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜெகன்ராஜ் (37), தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்லும்போது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் வளைவில் வைத்து திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலை மற்றும் கழுத்து, முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கிறிஸ்டோபர் ஜெகன்ராஜின் மனைவி ஜெபிதா அளித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News