உள்ளூர் செய்திகள் (District)
ஆசாரிபள்ளத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
- போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது 700 கிராம் கஞ்சா இருந்தது
- போலீசார் இருவ ரையும் கைது செய்தனர்.
நாகர்கோவில் :
ஆசாரிபள்ளம் சப்- இன்ஸ்பெக்டர் மேரி மெரினா தலைமையிலான போலீசார் மேல பெருவிளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த மேல பெருவிளையைச் சேர்ந்த கிறிஸ்து ஜெனின் (வயது 31), கார்த்திக் (23) இருவரை பிடித்தனர். பிடிபட்ட அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முர ணான தகவல்களை தெரிவித்த னர்.
பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது 700 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.