உள்ளூர் செய்திகள் (District)
தென்தாமரைகுளம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது
- 115 மதுபாட்டில்கள் பறிமுதல்
- கண்ணன் மற்றும் பால்பாண்டியன் ஆகிய இருவரையும் போலீசார் கைது
கன்னியாகுமரி:
தென்தாமரைகுளம் அடுத்துள்ள கரம்பவிளை மற்றும் ஆண்டிவிளையில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடப்பதாக தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் தேரிவிளை பகுதியை சேர்ந்த பால்பாண்டியன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 115 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.