உள்ளூர் செய்திகள் (District)

குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டதால் குமரி மாவட்டத்தில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2023-04-26 06:51 GMT   |   Update On 2023-04-26 06:51 GMT
  • இரணியல் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
  • கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

நாகர்கோவில் :

திக்கணங்கோடு தாரவிளையை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 46), தொழிலாளி. இவர் மீது இரணியல் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

எனினும் போலீசார் எச்சரிக்கையை மீறி ஜெயபால் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் இது தொடர்பாக கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து இரணியல் போலீசார், ஜெயபாலை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதே போல காட்டாத்துறையை சேர்ந்த சஜிவன்ராஜ் என்பவரை தக்கலை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இவர் மீது மார்த்தாண்டம் மற்றும் தக்கலை போலீஸ் நிலையங்களில் கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இதுவரை 25 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News