உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம் 

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-10-30 09:17 GMT   |   Update On 2022-10-30 09:17 GMT
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை
  • குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கஞ்சா, திருட்டு மது விற்பனை செய்பவரர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று முன் தினம் திருவனந்தபுரம் அருகே உள்ள பலராமபுரம் சாமவிளை புத்தன்வீட்டை சேர்ந்தஅல் அமீன் (வயது 31) என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதே போல் நாகர்கோவில் வெட்டூணிமடத்தை சேர்ந்தவர் செல்வன் (23). சமீபத்தில் இவரை கஞ்சா விற்பனை செய்த வழக்கில் வடசேரி போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே இரணியல்போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதே போல் வாத்தியார்விளை சேர்ந்தவர் அஜித் என்ற அஜித்குமார். இவரையும் சமீபத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக வடசேரி போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இவர் மீதும், இரணியல் போலீஸ் நியைத்தில் வழக்குகள் உள்ளன.

இவர்கள் இவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயில் அடைக்க உத்தரவிடுமாறு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று, இவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலகல் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் செல்வன், அஜித் ஆகிய இருவரையும் வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை. ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News