உள்ளூர் செய்திகள் (District)

குமரி மாவட்டத்தில் புதிதாக 65 பேருக்கு கொரோனா

Published On 2022-07-03 08:05 GMT   |   Update On 2022-07-03 08:05 GMT
  • கடந்த ஜனவரி முதல் 20,353 பேர் பாதிப்பு
  • மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிர படுத்த நடவடிக்கை

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிர படுத்த சுகாதார துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

நேற்று மாவட்டம் முழுவதும் 718 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 65 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக நாகர்கோவில் மாநகரில் மட்டும் 19 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் ஆண்கள், 40 பேர் பெண்கள் ஆவார்கள்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 20,353 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


Tags:    

Similar News