உள்ளூர் செய்திகள் (District)
குமரி மாவட்டத்தில் இன்று புதிதாக 70 பேருக்கு தொற்று
- பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு வீட்டு தனிமையிலே சிகிச்சை
- பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து மாவட்டம் முழுவதும் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாவட்டம் முழுவதும் 991 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 70 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதில் 31 பேர் ஆண்கள், 39 பேர் பெண்கள் ஆவார்கள். இதில் 4 குழந்தைகளும் அடங்கும்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்கா ணித்து வருகிறார்கள்.