உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் மழையின்போது குடை பிடித்து செல்லும் மாணவிகளை படத்தில் காணலாம் 

குளச்சலில் 84.6 மி.மீ. மழை

Published On 2022-10-19 09:29 GMT   |   Update On 2022-10-19 09:29 GMT
  • பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் 3 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
  • திற்பரப்பில் 3-வது நாளாக குளிக்க தடை

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்தகன மழை யின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

நேற்று இரவும் மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில் விட்டு விட்டு மழை பெய்தது. குளச்சல் பகுதி யில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்ச மாக 84.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர் கோவில், இரணியல், ஆரல்வாய்மொழி, கொட்டா ரம், மயிலாடி, கன்னிமார், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இரவு சாரல் மழை நீடித்தது.இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணை யில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இன்று காலை பேச்சிப் பாறை அணைக்கு வரக் கூடிய நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. இதை யடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் குறைக் கப்பட்டுள் ளது. நேற்று 4000 கனஅடி உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 3057 கனஅடி உபரி நீரும் 488 கன அடி தண்ணீர் மதகு கள் வழியாகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.94 அடியாக உள்ளது. அணைக்கு 2198 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 70 அடியை நெருங்குகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 69.20 அடியாக உள்ளது. அணைக்கு 1040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பேச்சிப் பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படு வதையடுத்து குழித்துறை, கோதை யாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் இன்று 3-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப் பட்டு வருகிறார்கள்.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை-6, பெருஞ்சாணி-6.6, சிற்றாறு-1-3, சிற்றாறு-2-5.6, பூதப்பாண்டி- 2.2, கன்னிமார்-2.2, நாகர் கோவில்-2, குருந்தன் கோடு-3, சுருளோடு-2, தக்கலை- 3.2, குளச்சல்-84.6, இரணியல்-6.4, பாலமோர்- 2.6 மாம்பழத்துறையாறு- 3, கோழிபோர் விளை- 6.2, ஆணைக்கிடங்கு-2, அடையாமடை-2.4, முள்ளங்கினாவிளை-12.6.

மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு திருவட்டார் தாலுகாவில் வீடு ஒன்று இடிந்து விழுந் துள்ளது. கும்பப்பூ சாகுபடி பணி மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. சுசீந்திரம், தெரிசனங்கோப்பு, பூதப் பாண்டி பகுதிகளில் உழவு பணி நாற்று பாவுதல் பணி போன்ற பணிகளில் விவ சாயிகள் மும்மரம் காட்டி வருகிறார்கள்.

Tags:    

Similar News