உள்ளூர் செய்திகள் (District)
- கடந்த மாதம் 9-ந்தேதி இறச்சகுளம் சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
- சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்
கன்னியாகுமரி:
சுசீந்திரம் அருகே உள்ள ராமபுரம் பழைய காலனியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 42). பழைய இரும்பு வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (34). கடந்த மாதம் 9-ந்தேதி இறச்சகுளம் சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இதையடுத்து செல்வியை அவரது உறவினர் வீடுகளில் தேடியும், அவர் கிடைக்காத காரணத்தால் இது குறித்து தங்கமணி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாயமானவரை தேடி வருகிறார்.