உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் இன்று கரும்பு-தேங்காயுடன் பா.ஜனதா விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-26 09:32 GMT   |   Update On 2022-12-26 09:32 GMT
  • தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
  • ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கையில் தேங்காய், கரும்பு ஆகியவற்றை ஏந்திய படி தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

நாகர்கோவில் :

பொங்கல் திருநாளில் பொதுமக்களுக்கு கரும்பு, சர்க்கரை, தேங்காய் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்காத தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

குமரி மாவட்ட பாரதிய ஜனதா விவசாய அணி சார்பில் இன்று காலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட விவசாய அணி தலைவர் முருகராஜன் தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் அருள், மாநில விவசாய அணி துணைத் தலைவர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாநில செயலாளர் மீனா தேவ், மாவட்ட துணை தலைவர் தேவ், பொருளாளர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் சுனில் குமார், அஜித் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கையில் தேங்காய், கரும்பு ஆகியவற்றை ஏந்திய படி தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News