உள்ளூர் செய்திகள்

திங்கள்நகரில் இன்று பஸ்-டெம்போ மோதல்

Published On 2023-05-30 06:53 GMT   |   Update On 2023-05-30 06:53 GMT
  • பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் இறங்கினர். அதன்பிறகு பஸ் அங்கிருந்து புறப்பட்டது.
  • சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி :

நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனையை சேர்ந்த அரசு பஸ் ஒன்று இன்று காலை நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து செம்பொன்விளைக்கு புறப்பட்டு சென்றது. இந்த பஸ், திங்கள்நகர் பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் இறங்கினர். அதன்பிறகு பஸ் அங்கிருந்து புறப்பட்டது.

பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, திங்கள்நகர்-குளச்சல் ரோட்டில் டெம்போ வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பஸ்சும், ெடம்போவும் மோதிக்கொண்டன. இதில் பஸ்சில் முன் பக்க கண்ணாடி உடைந்து விழுந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News