இரணியல் தற்கொலைக்கு முயன்ற கைதி மீது வழக்கு
- ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதி
- இரணியல் கோட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.
கன்னியாகுமரி :
திங்கள் சந்தை அருகே புது குளத்தான் கரை பகுதி யைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 55).
இவர் கடந்த ஜனவரி மாதம் குளச்சல் அருகே டாஸ்மார்க் கடையில் நடந்த மோதலில்அதே பகுதியைச் சேர்ந்த அருள் பாபி (53) என்பவரை தாக்கினார். இதில் அருள் பாபி இறந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் ராஜன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஜெயி லில் இருந்த ராஜனை வழக்கு விசாரணைக்காக நேற்று இரணியல் கோட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது ராஜன் போலீ சாரிடம் சிறுநீர் கழிக்க செல்லவேண்டும் என்று கூறிவிட்டு கழிவறைக்கு சென்றார்.
சிறிது நேரம் கழித்து கழிவறையிலிருந்து சத்தம் கேட்டதையடுத்து அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.அப்போது கழிவறையின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. ரத்த வெள் ளத்தில் கிடந்த ராஜனை மீட்டு போலீசார் சிகிச் சைக்காக குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச் சைக்காக நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து ராஜனை போலீசார் சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்துள்ளனர். இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள். தற்கொலைக்கு முயன்ற ராஜன் மீது போலீ சார் இந்திய தண்டனைச் சட்டம் 309 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.