உள்ளூர் செய்திகள்
மேலசங்கரன்குழி அருகே கல்லூரி மாணவி மாயம்
- புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து மாயமான சுமங்கலாவை தேடி வருகிறார்.
- வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றவர் மாலையில் வீடு திரும்பாததால் பதற்றம்.
கன்னியாகுமரி:
மேல சங்கரன்குழி அருகே உள்ள பெருஞ் செல்வவிளையை சேர்ந்த வர் ஜெகன் தொழி லாளி.
இவரது மகள் சுமங்கலா (வயது22). இவர் திருவிதாங் கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. முதுகலை பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை சுமங்கலா வீட்டில் இருந்து வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு களில் தேடினர். ஆனால் சுமங்கலா பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அவர் எங்கு சென்றார் என்பது தெரிய வில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஜெகன் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து மாயமான சுமங்கலாவை தேடி வருகிறார்.