உள்ளூர் செய்திகள் (District)
குமரி மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா
- குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
- நேற்று மாவட்ட முழுவதும் 659 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. முஞ்சிறை ஒன்றியத்தில் 11 பேரும், குருந்தன்கோடு, திருவட்டார் ஒன்றியத்தில் தலா 4 பேரும் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் ஒருவரும் தக்கலை ஒன்றியத்தில் 6 பேரும், நாகர்கோவில் மாநகரில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. நேற்று மாவட்ட முழுவதும் 659 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை குமரி மாவட்டத்தில் 19537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.