உள்ளூர் செய்திகள் (District)

குமரி மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா

Published On 2022-07-30 06:59 GMT   |   Update On 2022-07-30 06:59 GMT
  • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்பொழுது 2 பேர் மட்டுமே சிகிச்சை
  • பெரும்பாலானோருக்கு வீட்டு தனிமையிலேயே சிகிச்சை

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 764 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள்.

கடந்த ஏழு மாதத்தில் 21,423 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்பொழுது 2 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் பெரும்பாலானவர் வீட்டு தனிமையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News