உள்ளூர் செய்திகள் (District)

குமரியில் கொரோனா பாதிப்பு குறைந்தது

Published On 2022-08-09 08:57 GMT   |   Update On 2022-08-09 08:57 GMT
  • 4 பேருக்கு மட்டுமே தொற்று
  • கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 21,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் 656 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 4 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குருந்தன் கோடு ஒன்றியத்தில் 2 பேரும், நாகர்கோவில், தக்கலை பகுதியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 21,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News