குளச்சலில் கடலில் மூழ்கிய மீனவர் உடல் மீட்பு
- மீனவர் தேவதாசனுக்கு மனைவியும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.
- மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே உள்ள மேல குறும்பனையை சேர்ந்தவர் தேவதாசன் (வயது40). இவர் கடந்த 18-ந்தேதி குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கடல் அலையில் சிக்கி மாயமானார். அவரை கடந்த 3 நாட்களாக போலீசாரும், உறவினர்களும் தேடி வந்தனர்.மரைன் போலீசார் தூண்டில் வளைவு கற்களுக்கு இடையேயும் சென்று தேடினர்.
இந்நிலையில் மாயமான மீனவ ரின் லுங்கி கடல் அலையில் நேற்று காலை கரை ஒதுங்கியது. இதனால் அவர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என குடும்பத்தினர் பீதியடைந்தனர். இந்நிலையில் தேவதாசன் உடல் நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் குளச்சல் துறைமுக பகுதியில் மிதந்து சென்றது.
இதனை விசைப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் பார்த்து கரையில் சோகமாக அமர்ந்திருந்த உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து மீனவர்கள் வள்ளத்தில் சென்று அவரது உடலை மீட்டு கரை சேர்த்தனர்.
பின்னர் மரைன் போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேவதாசன் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலில் மாயமாகி பலியான மீனவர் தேவதாசனுக்கு ஜெகதா என்ற மனைவியும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.