கன்னியாகுமரி அருகே மீனவர் தீக்குளித்து தற்கொலை
- தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
- குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறை முக தெருவை சேர்ந்தவர் லூகாஸ் (வயது 61), மீனவர். இவருக்கு மனைவியும், 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
லூகாஸ் குடும்ப பிரச் சினை காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதைப்பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் திடுக்கிட்டு அலறி னார்கள். பின்னர் தீக்காயத்தினால் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன்அளிக்காமல் லூகாஸ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.