உள்ளூர் செய்திகள் (District)
இரணியல் அருகே கார் மோதி கணவன் மனைவி படுகாயம்
- மோட்டார் சைக்கிள் சென்றபோது எதிரே வேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது
- வினு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
தக்கலை மணலிக்கரை அடுத்த மணக்காவிளை பகுதியை சேர்ந்தவர் பாபு (38). இவரது மனைவி மகேஷ்வரி (35). இவர்கள் நேற்று முன்தினம் மதியம் இரணியலில் இருந்து தக்கலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். கண்ணாட்டுவிளையில் மோட்டார் சைக்கிள் சென்றபோது எதிரே வேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. தூக்கி வீசப்பட்ட கணவன் மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து மகேஷ்வரி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் காரை ஓட்டி வந்த நெல்லியார்கோணம் பகுதியை சேர்ந்த ஜெபவேல் ஒய்சிலின் என்ற வினு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.