உள்ளூர் செய்திகள்

சுசீந்திரம் அருகே வியாபாரி திடீர் மாயம்

Published On 2022-07-30 07:36 GMT   |   Update On 2022-07-30 07:36 GMT
  • மனைவி போலீசில் புகார்
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

நாகர்கோவில்:

சுசீந்திரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராமபுரத்தை அடுத்த ஆண்டார் குளம் கால்வாய் தெருவைச் சேர்ந்தவர் செலின்ராயன் (வயது 34).

இவர் பேன்சி பொருட்களை விற்பனை செய்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வீட்டில் இருந்து வியாபார விஷயமாக வெளியே சென்ற செலின்ராயன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

அவரை, மனைவி செலின்ரோஸ் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் சுசீந்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாய் லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News