உள்ளூர் செய்திகள் (District)
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் மஞ்சப்பை
- கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வருவதை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சுற்றுலா பயணிகள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகள் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி:
உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மலையோர பகுதிகளான கோதையார், குற்றியார் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வருவதை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டது.
மேலும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சப்பையை வனச்சரக ஆய்வாளர் ராஜன் வழங்கினார்