உள்ளூர் செய்திகள் (District)
தக்கலை பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை
- கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை
- திடீரென சோதனை மேற்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் குமரி மாவட்டத்தில் கஞ்சா எங்கிருந்து சப்ளை செய்யப்படுகிறது. யார் சப்ளை செய்கிறார்கள் என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அரசு பஸ்சில் கஞ்சா சப்ளை செய்யபடலாம் என ரகசிய தகவல் வந்ததையொட்டி தக்கலை பழைய பஸ் நிலையத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நெப்போலி யன் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் அரசு பஸ்களில் சோதனை நடத்தினர்.
மேலும் சந்தேகத்துக்கு உள்பட்ட யாராவது பொது மக்களின் பார்வையில் தென்பட்டால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தரவும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று அரசு பஸ்களில் திடீரென சோதனை மேற்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.