உள்ளூர் செய்திகள் (District)

மூத்த குடிமக்களுக்கு ரெயில் பயண கட்டண சலுகையை தொடர்ந்து வழங்க வேண்டும்

Published On 2022-07-31 06:47 GMT   |   Update On 2022-07-31 06:47 GMT
  • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
  • ரெயில்வேக்கு ஏற்படும் இழப்பை சமூக நலனாக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாகர்கோவில்:

மத்திய ரெயில்வேத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ரெயிலில் பயணம் செய்யும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் கட்டண சலுகையை ரெயில்வே துறை வழங்கி வந்தது. கொரோனா காலத்தில் இவை நிறுத்தப்பட்டது. இது முதியோர் மத்தியில் விரக்தி யை ஏற்படுத்தி உள்ளது.

முதியோருக்கு கட்டண சலுகை வழங்குவதன் மூலம் ரெயில்வேக்கு இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டாலும், அதை சமூக நலனாக அரசு ஏற்றுக் கொண்டு, மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை எந்த காரணத்தை கொண்டும் நிறுத் தாமல் மீண்டும் தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

எனவே மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி, மூத்த குடிமக்களுக்கு வழங் கப்பட்ட பயண கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து உதவ கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News