- திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை கொட்டியது.
குறிப்பாக அணை பகுதி களிலும் மலையோர பகுதி களிலும் கொட்டி தீர்த்த மழையின் காரண மாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அணைகள் நிரம்பி வந்ததையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.
பேச்சிப்பாறை, அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது மழை சற்று குறைந்ததையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டு உள்ளது. மதகுகள் வழியாக மட்டும் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார், தக்கலை பகுதிகளில் நேற்றிரவும் சாரல் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.32 அடியாக உள்ளது. அணைக்கு 827 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 283 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.25 அடியாக உள்ளது. அணைக்கு 501 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 575 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.46 அடியாக வும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 12.56 அடியாகவும் உள்ளது. திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அணையில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வரு கிறார்கள்.விடுமுறை தினமான இன்று குமரி மாவட்ட மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்று லா பயணிகள் திற்பரப்பு அருவியில் குவிந்திருந்தனர்.