உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் பகுதிகளில் கழிவுநீர் ஓடையின் மேல் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-09-02 11:18 GMT   |   Update On 2022-09-02 11:18 GMT
  • மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
  • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் ஓடையின் மேல் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி மேயர் மகேஷ் கமிஷனர் ஆனந்த மோகன் ஆகியோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ஒழுகினசேரியிலிருந்து பார்வதிபுரம் வரை உள்ள சாலையில் கழிவுநீர் ஓடையின் மேல் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று நடந்தது.

ஜே.சி.பி. எந்திரம் மூலமாக மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடைகள் முன்பு போடப்பட்டிருந்த சிலப்புகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் சீட்டுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையடுத்து அங்குபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News