உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் இதுவரை 57 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Published On 2022-09-10 09:34 GMT   |   Update On 2022-09-10 09:34 GMT
  • தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தால் குண்டர் சட்டத்தில் சிறை
  • மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை

நாகர்கோவில்:

கல்குளம் குமாரபுரம் புத்தன் காலனியை சேர்ந்தவர் சிபு (வயது 33).

இவர் மீது பூதப்பாண்டி, இரணியல், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து சிபு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் அரவிந்த், அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதைதொடர்ந்து போலீசார் சிபுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

குற்ற நிகழ்வுகளில் குமரி மாவட்டத்தில் இதுவரை 57 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News