உள்ளூர் செய்திகள் (District)
சுங்கான்கடை அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி
- ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழப்பு
- இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உள்ள சகாயநகர் என்ற இடத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 55). அரசு பஸ் டிரைவர்.
கடந்த 20-ந் தேதி இரவு தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பஸ் ஓட்டி சென்ற போது சுங்கான்கடை என்ற இடத்தில் வைத்து திடீரென சாலையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது மோதியது.
இதில் பலத்த காய மடைந்த அவரை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார்.
இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.