உள்ளூர் செய்திகள் (District)
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்துள்ளார்
- ராஜாகமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே காக்கா தோப்பை சேர்ந்தவர் சுயம்புராஜன் இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலக்ஷ்மி (வயது 38). இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இவருக்கு திடீரென வலிப்பு நோய் வந்ததாகவும் உடனடியாக அவரை உறவினர்கள் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த தாகவும் கூறப்படுகிறது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்துள்ளார்
இது குறித்து தகவல் இருந்த ராஜாகமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.