உள்ளூர் செய்திகள் (District)

மார்த்தாண்டத்தில் மாணவியை பச்சை குத்த வற்புறுத்திய வாலிபர் கைது

Published On 2022-08-01 08:11 GMT   |   Update On 2022-08-01 08:11 GMT
  • மாணவியின் மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த வற்புறுத்தியுள்ளார்
  • வாலிபரின் காதல் லீலை அத்துமீறி செல்வதை பார்த்த மாணவி பயந்து அரண்டு போய் உள்ளார்.

கன்னியாகுமரி :

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 28- வயதுடைய வாலிபர் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி. எஸ். சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவ் வழியாக சென்ற கல்லூரி மாணவிக்கு வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

வாலிபர் மாணவியை கண்மூடித்தனமாக காதலிக்க தொடங்கி உள்ளார். ஒரு கட்டத்தில் மாணவி உண்மையாக காதலிக்கிறாரா என தெரிந்து கொள்ள விரும்பிய வாலிபர், மாணவியின் மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த வற்புறுத்தியுள்ளார். வாலிபரின் காதல் லீலை அத்துமீறி செல்வதை பார்த்த மாணவி பயந்து அரண்டு போய் உள்ளார்.

மாணவி தனது வீட்டில் கூறியுள்ளார். அவரது தந்தை மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.இதனால் உஷாரான போலீசார் வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். வாலிபரிடம் விசாரித்த போது தான் மாணவியை காதலிப்பதாகவும் அவள் தனக்கு வேண்டும் எனவும் கூறிவருகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீ சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News