உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம் 

கன்னியாகுமரி அருகே கோவில்களில் திருடிய வாலிபர் கைது

Published On 2022-10-23 07:28 GMT   |   Update On 2022-10-23 07:28 GMT
  • கன்னியாகுமரி போலீசார் விவேகானந்தபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கோவில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக் கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீ சார் அவரை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சுசீந்திரம் அக்கரை பகுதியை சேர்ந்த திராஜ் (வயது 19) என்பதும், தற்போது தெற்கு குண்டலில் தங்கி இருந்து கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கோவில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவர் 7 வழக்குகளில் சம்பந் தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து திராஜை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நாகர்கோவிலில் உள்ள ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News