உள்ளூர் செய்திகள் (District)

குலசேகரத்தில் கஞ்சாவுடன் வாலிபர் கைது

Published On 2022-09-19 07:06 GMT   |   Update On 2022-09-19 07:06 GMT
  • விசாரணையில் ஆறுகாணி பகுதியை சேர்ந்த அசின் கான் (வயது 28) என்பவர் தான் கஞ்சா கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.
  • 50 கிராம் கஞ்சா மற்றும் புகைப்பதற்கு வேண்டிய குழாய்களும் பறி முதல் செய்யப்பட்டன.

கன்னியாகுமரி :

குலசேகரத்தில் கஞ்சா விற்றதாக மோனிஷ் என்ப வரை போலீசார் கைது செய்து, நாகர்கோவில் சிறை யில் அடைத்தனர். அவரிடம் நடத்திய விசார ணையில் ஆறுகாணி பகுதியை சேர்ந்த அசின் கான் (வயது 28) என்பவர் தான் கஞ்சா கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தலைமையில் குலசேகரம் சப்-இன்ஸ்பெக்டர் வினிஷ் பாபு மற்றும் போலீசார், அசின் கானை தேடி வந்த னர். அவரை நேற்று போலீ சார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா மற்றும் புகைப்பதற்கு வேண்டிய குழாய்களும் பறி முதல் செய்யப்பட்டன.

அவருக்கு வேறு எங்கி ருந்து கஞ்சா வருகிறது? யார்-யாருடன் தொடர்பு உள்ளது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அசின்கான் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News