உள்ளூர் செய்திகள்

சாலை விபத்தில் 2 பேர் காயம்

Published On 2023-09-07 09:44 GMT   |   Update On 2023-09-07 09:44 GMT
  • சாலை விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை

கரூர்

குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44). சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த மாட்டு தரகர் ஓமாந்து (81). இந்தநிலையில் சிவக்குமார் தனக்கு மாடு வாங்குவதற்காக ஓமாந்துவை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். சத்தியமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே 2 பேரும் சாலையை கடந்துள்ளனர்.

அப்போது அதே சாலையில் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம், இவர்கள் மீது மோதியது. இதில் சிவக்குமார் மற்றும் ஓமாந்து ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News